×

திருப்பதியில் வடலூர் பக்தர் திடீர் சாவு

குறிஞ்சிப்பாடி, மே 13: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக வந்த வடலூரை சேர்ந்த பாபு என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் குறித்து தகவல் தெரிந்தால் திருமலை  முதலாவது நகர காவல் நிலைய உதவி ஆய்வாளரை 94923 37869 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags : Tirupati ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...