சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறுப்படம்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம்  வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு காணொளி பிரசார வாகனம் மூலம், விபத்துக்கள் குறித்த பிரத்தியோக காட்சிகளுடன் குறும்பட வெளியீடு நிகழ்ச்சி, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுராந்தகம் பஸ் நிலையத்தில் நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், மதுராந்தகம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்தன் பொதுமக்களிடம் சாலை விதிகளை பின்பற்றுவது கட்டாயம், ஹெல்மெட் அணிவது, சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிச் செல்லும்பொழுது ஏற்படும் விபத்துக்கள், பஸ்களின் கூரை மீது ஏறி செல்வதால் ஏற்படும் விபத்துக்கள், சிறுவர்கள் பைக்கை அதிவேகமாக ஓட்டி செல்வதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து  தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு காணொளி பிரசார வாகனம் மூலமாக விபத்துகள் குறித்து திரைப்பட நடிகர், நடிகைகளின் விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டது. இதேபோன்று, மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் மதுராந்தகம் மோட்டார் வாகனம் ஆய்வாளர் அலுவலகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

Related Stories: