அண்ணாநகர்: ஷெனாய் நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான 13 கடைகள் உள்ளன. இங்கு கடை நடத்துபவர்கள், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை ரூ.25 லட்சத்தை பல மாதங்களாக செலுத்தவில்லை. இதுதொடர்பாக அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அளித்தும், பதில் இல்லை. இந்நிலையில், 8வது மண்டல அதிகாரி முருகேசன், உதவி வருவாய் அலுவலர் ரவிசந்திரன் மற்றும் உரிமம் ஆய்வாளர் திருநாவுக்கரசு தலைமையில் அதிகாரிகள் நேற்று வாடகை பாக்கி செலுத்தாத 13 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.