×

கட்டிட உரிமையாளர் உள்பட மூவர் மீது வழக்கு

முசிறி, மே12: திருச்சி அடுத்த சமயபுரம் அருகே நெ. 1 டோல்கேட் மேனகா நகரில் அப்பார்ட்மென்ட் அருகே கீழே காற்றில் சாய்ந்து விளம்பர போர்டை தூக்கியபோது மின்சாரம் பாய்ந்து சேட்டு, செல்லதுரை என்ற 2 தொழிலாளிகள் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் கட்டிட உரிமையாளர்கள் லால்குடி அப்துல்ரகுமான், டோல்கேட் கமருதீன், உறையூர் முகமதுரபீக் ஆகியோர் மீது கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED திருவெறும்பூர் அருகே வீட்டில் அழுகிய...