×

ஜெயங்கொண்டத்தில் தனியார் பள்ளி முன்புறம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஜெயங்கொண்டம், மே 12: ஜெயங்கொண்டம் கும்பகோணம் சாலையில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த இடத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து செல்லும் பெற்றோர்களை கவரும் விதமாக பழக்கடைகள் ஜூஸ், இளநீர் உள்ளிட்ட பல்வேறு கடைகள் கடைகள், தள்ளுவண்டி கடைகள் நிரந்தரமாக வைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்களிடத்தில் பெற்றோர்கள் இடத்திலும் பள்ளிக்கு குழந்தைகளை கொண்டு வந்து விட்டுச் செல்வதில் இடையூறு ஏற்படுவதாக கூறியதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் காவல்துறையிடம் புகார் செய்தனர். இதனையடுத்து நெடுஞ்சாலை துறையினருக்கு பரிந்துரை செய்ததன் பேரில் நெடுஞ்சாலைத்துறையினர் நகராட்சி நிர்வாகத்தினர் காவல்துறை உதவியுடன் அங்கு இருந்த வாகனங்கள், கடைகளை அப்புறப்படுத்தக் கோரி உத்தரவிட்டதை அடுத்து மீண்டும் அங்கு வைக்கப்பட்டிருந்த கடைகளை நேற்று காலை தள்ளு வண்டிகள் எல்லாம் நகராட்சி லாரிகளில் ஏற்றி அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Jayangonda ,
× RELATED அமைச்சர் சிவசங்கர் காரில் பறக்கும்படை சோதனை