போச்சம்பள்ளி, மே 12: போச்சம்பள்ளி வட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க சிறப்பு கூட்டம் என். தட்டக்கல் சமுதாய கூட்டத்தில் நேற்று நடந்தது. மாதலிங்கம் தலைமை தாங்கினார். பிரகாஷ் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாவட்ட தலைவர் சபாபதி, மாவட்ட செயலாளர் கந்தன், வட்ட தலைவர் கந்தன், வட்ட செயலாளர்கள் சின்னசாமி, சாமு ஆகியோர் பேசினர். கடல் வேந்தன், பெரியசாமி, சின்னசாமி, மாதன், சாந்தமூர்த்தி, அன்பரசு, மகாலிங்கம், முபாரக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.