தேன்கனிக்கோட்டை, மே 12 :இருதுக்கோட்டை அருகே டூவீலர் மோதியதில் மின் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஊத்தங்கரை கவர்னர் தோப்பு பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி (47). இவர் ஓசூர் மின்வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 3ம் தேதி தேன்கனிக்கோட்டை அடுத்த இருதுக்கோட்டையில் உள்ள நண்பர் வீட்டிற்கு டூவீலரில் சென்றுள்ளார். எதிரே வந்த மற்றொரு டூவீலர், கருணாநிதியின் டூவீலர் மீது மோதியது. இதில் கருணாநிதி பலத்த காயமடைந்தார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.