ஊத்தங்கரை, மே 12: ஊத்தங்கரை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெகடர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஊத்தங்கரை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திரபானு ரெட்டி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர் திருவணப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ₹19 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் சுற்றுச்சுவர் கட்டும் பணி, கொண்டம்பட்டியில் ₹23.56 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் ஊராட்சி அலுவலக கட்டிடம், மிட்டப்பள்ளி ஊராட்சியில் ₹70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் சமுதாயக்கூடம், ஜே.ஜே. நகரில் ₹2.76 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் மூன்று தொகுப்பு வீடுகள். ₹8.70 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுகாதார வளாகம் உள்ளிட்ட திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.