சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது

சென்னை: தி.நகர் பகுதியில் மரச்சாமான்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தவர் உமாபதி(23). இவருக்கு  இன்ஸ்டாகிராம் மூலம் தேனாம்பேட்டையை சேர்ந்த 13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6ம் தேதி சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தேனாம்பேட்டை போலீசில் புகாரளித்தனர். அதன்படி போலீசார் இந்த வழக்கை தேனாம்பேட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். மகளிர் போலீசார் உமாபதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: