அரசு கலை கல்லூரியில் டேக்வாண்டோ போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம்

கரூர், மே 11: கரூர் அரசு கலைக் கல்லூரியில் பல்கலைக் கழக அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் உட்பட 9 மாவட்டங்களை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட அரசு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த டேக்வாண்டோ போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த போட்டிகள் 46 கிலோ முதல் 90 கிலோ எடை பிரிவுகள் என்ற அடிப்படையில் மாணவர்களுக்கு 8 பிரிவுகள், மாணவிகளுக்கு 8 பிரிவுகள் என்ற அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி, உடற்கல்வித்துறை இயக்குநர் ராஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் போன்றவை வழங்கப்பட்டன.

Related Stories: