மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கம் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா நடந்தது. இதையொட்டி, தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கத்தில் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த 3ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தினமும் விக்னேஸ்வர உற்சவம், சூரிய பிரபை, சந்திரப் பிரபை, அதிகார நந்தி சேவை, பூதம், நாகம், அன்னம், யானை, சிம்மம் உள்பட பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.