தூர்வாரும் பணி மும்முரம் கஞ்சா, குட்கா, போதை மாத்திரை, ஊசி விற்றதாக மாநகரில் 4 மாதங்களில் 369 பேர் கைது

திருச்சி, மே.10: திருச்சி மாநகரில் கடந்தநான்கு மாதங்களில் கஞ்சா, குட்கா, போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை விற்பனை செய்த 369 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 61 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதில், காந்திமார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்றுவந்த கணேசன் மனைவி தமிழ்செல்வி (52), பாலக்கரை பகுதியில் முனியாண்டி மகன் நவலடியான் (46), எ.புதூர் பகுதியில் ராஜூ மகன் குமார் (எ)வெள்ளெலிகுமார் (40), கே.கே.நகரில் கலியமூர்த்தி மகன் சக்திவேல் ஆகிய 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், சட்ட விரோதமாக போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்யபட்டு 12 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 1550 போதை மாத்திரைகள் மற்றும் 80 போதை மருந்து பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. இதில் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த பாலகுரு மகன் அரவிந்த்(25), சாம்வில்சன் மகன் ஷெப்ரின் வில்சன்(23), முகமது யூசுப் மகன் அசன்அலி(24) ஆகிய 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில், நடப்பாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது 296 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 296 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகரில் மட்டும் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, போதை மாத்திரை மற்றும் ஊசிகள் விற்பனை செய்த மொத்தம் 369 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகரில், தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் மூலமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Related Stories: