கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பாத்தபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி(29). இவர் அங்குள்ள சிமென்ட் கல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பணியாற்றினார். இந்நிலையில், நேற்று முன்தினம் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட சக தொழிலாளர்கள் அவரை மீட்டு கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.