×

வாகனம் மோதி தொழிலாளி பலி இளம்பெண், குழந்தை படுகாயம்

கிருஷ்ணகிரி, ஏப்.28: பர்கூர் அடுத்த பாகிமானூர் பகுதியை சேர்ந்தவர் சர்தார் (55), கூலி தொழிலாளி. பர்கூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சாதிக். இவரது மனைவி நஜ்மா (27). இவர்களுக்கு சீகா (3) என்ற குழந்தை உள்ளது. உறவினர்களான இவர்கள், டூவீலரில் நேற்று முன்தினம் பாகிமானூரில் இருந்து கந்திகுப்பத்திற்கு சென்று கொண்டிருந்தனர். மிட்டப்பள்ளியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரி அருகே சென்றபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் இவர்களின் டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த சர்தார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நஜ்மா, சீகாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில், அங்கு சென்ற கந்திகுப்பம் போலீசார், சர்தாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நஜ்மாவுக்கும், குழந்தை சீகாவுக்கும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்