சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட ரூ.41 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் ஆலை மேலாளர் கைது

சிவகாசி, ஏப். 28: சிவகாசி பி.கே.என் ரோடு பகுதியைச் சேர்ந்த ஜான்சிராணிக்கு சொந்தமான பட்டாசு ஆலை சிவகாசி அருகே பாரைப்பட்டியில் உள்ளது. இங்கு சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து சிவகாசி கிழக்கு போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் அனுமதிக்கப்பட்ட வேலை ஆட்களை விட அதிகமான ஆட்களை வைத்து, பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பிஜிலி வெடிகள், சக்கரம், ராக்கெட் உள்ளிட்ட பட்டாசுகள் தயாரித்தது தெரிய வந்தது. அதனை ெதாடர்ந்து, ரூ.41 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்து, பட்டாசு ஆலை மேனேஜர் வைத்தியலிங்கத்தை கைது செய்து, ஆலை உரிமையாளர் ஜான்சிராணி, போர்மேன் குணசேகரனை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: