மனைவியை தாக்கிய கணவர் கைது

சிவகாசி, ஏப். 28: வெம்பக்கோட்டையை சேர்ந்தவர் பழனிச்சாமி(43) இவரது மனைவி ராஜேஸ்வரி. பழனிச்சாமி குடிப்பழக்கம் உள்ளவர். மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் ேநற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் ராஜேஸ்வரி பணம் தர மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பழனிச்சாமி மனைவியை அடித்து உதைத்துள்ளார். இதுகுறித்து ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில், வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்தனர்.

Related Stories: