×

கஞ்சா வைத்திருந்த நான்கு பேர் கைது

கீழக்கரை, ஏப்.28: கீழக்கரையில் போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாசிடம் புகார் அளித்து வந்தனர். இதைத்தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டு பிடிப்பதற்கான தீவிர நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில் கீழக்கரை சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்தரசன் தலைமையில் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது காஞ்சிரங்குடி பஸ் ஸ்டாப் அருகே 4 பேர் கொண்ட கும்பல் போலீஸ் வாகனத்தை கண்டதும் ஓட முயற்சித்தனர்.இதையடுத்து போலீசார் அந்த கும்பலை விரட்டி சென்று மடக்கி பிடித்து கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 2 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் கீழக்கரையில் சில்லறையாக விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து கஞ்சா வைத்திருந்த ஏர்வாடி தண்ணீர் பந்தல் முகம்மது(19),கீழக்கரை முகம்மது நசிருதீன்(26), அகமது அசாருதீன்(26), 500 பிளாட்டை சேர்ந்த 17வயது சிறுவன் ஆகிய 4பேரை கைது செய்தனர். கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED நலத்திட்ட உதவிகள் கிடைக்காவிட்டால்...