×

கோயில் உண்டியல் உடைப்பு

சிங்கம்புணரி, ஏப்.28: சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் நேற்று மர்ம நபர்கள் கோயில் மாடி வழியாக உள்ளே புகுந்து உண்டியலை உடைத்துள்ளனர். இதில் இருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான பணம் திருடு போய்விட்டதாக கூறப்படுகிறது. மேலும் சாமி சிலை அருகே இருந்த வெண்கலத்தில் செய்யப்பட்ட வேல் ஒன்றும் காணாமல் போயுள்ளதாக கோயில் நிர்வாகத்தின் சார்பாகன் புகார் செய்துள்ளார். மேலும் கோயிலின் உள்ளே வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளும் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிங்கம்புணரி நகரில் இரவு நேர ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சீர்காழியில் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு பேரணி