திருப்பூர், ஏப்.28: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் வரும் 30ம் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடக்கிறது.இம்முகாம் 138 இடங்களில் நடைபெற உள்ளது. தற்போது, கொரோனா பாதிப்பு சில மாவட்டங்களில் அதிகரிக்க தொடங்கிய நிலையில், இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் இந்த முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு இந்த தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திக்கொண்டு, சுத்தமான மற்றும் சுகாதாரமான மாநகரகமாக திருப்பூரை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.