நடுவட்டத்தில் ரூ.3 கோடியில் பஸ் நிலையம் கட்டும் பணி தீவிரம்

ஊட்டி, ஏப்.28:ஊட்டி அருகே நடுவட்டம் பேரூராட்சிக்குட்பட்ட நடுவட்டம் கிராமம் உள்ளது. இப்பகுதி அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் முக்கிய வழித்தடத்தில் அமைந்துள்ளது. மேலும், ஊட்டியில் இருந்து கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாகவும் உள்ளது. இவ்வழித்தடத்தில் செல்லும் அனைத்து அரசு பஸ்களும் இங்கு நிறுத்துவது வழக்கம். அதேபோல், சுற்றுலா பயணிகள் வாகனங்களும் அங்கு நிறுத்தி தேநீர் மற்றும் உணவு உட்கொள்வது வழக்கம். கடந்த பல ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பஸ் நிலையம் மிகவும் பழுதடைந்த நிலையில், அந்த பஸ் நிலையம் இடிக்கப்பட்டது. புதிதாக அப்பகுதியில் பஸ் நிலையம் மற்றும் வணிக வளாகம் ஆகியவை மூலதன நிதியின் கீழ் ரூ.3 கோடியில் கடந்த ஓராண்டிற்கு முன் துவக்கப்பட்டு தற்போது கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது

இது குறித்து நடுவட்டம் பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில்,‘‘கேரளா மற்றும் கர்நாடகம் மாநிலத்திற்கு செல்லும் பிரதான சாலையில் நடுவட்டம் பகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த பல ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பஸ் நிலையம் பழுதடைந்தை நிலையில், தற்போது ரூ.3 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம், அத்துடன் சேர்ந்து வணிக வளாகமும் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் ஒரு மாதத்திற்குள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்’’ என்றனர்.

Related Stories: