ஈரோடு, ஏப்.28: தமிழ்நாடு வணிக வரி சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொருளாளர் விஜி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் வாசுகிராணி, ராகவன், வெங்கடேசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட 1,000 துணை மாநில வரி அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அலுவலர்கள், அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்போது வழக்கமான கவுன்சலிங் முறையில் மட்டுமே இடமாற்றம் செய்ய வேண்டும்.