ஈரோடு, ஏப்.28: அகில இந்திய பிஎஸ்என்எல்-டிஓடி ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ராஜசேகர், மாநில துணைத் தலைவர் குப்புசாமி, மாநில துணைச் செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட செயலாளர் சின்னசாமி ஆகியோர் உரையாற்றினர். இதில், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 15 சதவீதம் ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும். இதுபற்றிய கோரிக்கையின்படி பார்லிமென்ட் கமிட்டி, ஓய்வூதியர்களின் 65வது வயதில் 5 சதவீதம் 70வது வயதில் 10 சதவீதம், 75 வது வயதில் 15 சதவீதம், 80வது வயதில் 20 சதவீத உயர்வுக்கு பரிந்துரைத்தது. அதை உடனடியாக நடைமுறைப்படுத்தி வழங்க வேண்டும்.