×

பட்டா பிரச்னைக்கு இன்று சிறப்பு முகாம்

சிவகங்கை, ஏப். 22: சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம் வாரந்தோறும் புதன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகிறது.

அதன்படி இன்று தேவகோட்டை வட்டம் எழுவன்கோட்டை, களத்தூர், நம்பியூர் கிராமங்கள், திருப்பத்தூர் வட்டம் ஒழுகமங்கலம், ரணசிங்கபுரம் கிராமங்கள், சிவகங்கை வட்டம் பில்லூர், இலுப்பக்குடி கிராமங்கள், காளையார்கோவில் கிராமம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. எனவே, பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பட்டா தொடர்பான தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன் அடையலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...