×

தேவகோட்டை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு: மாடுபிடி வீரர்கள் 3 பேர் காயம்

தேவகோட்டை, ஏப். 22: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே ஆறாவயல் சண்முகநாதபுரத்தில் நேற்று வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து 20 காளைகள் மற்றும் 180 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். திடலின் நடுவே கட்டியிருந்த காளையை குறிப்பிட்ட நேரத்தில் வீரர்கள் அடக்கினர். சில காளைகள் வீர்களுக்கு பிடி கொடுக்காமல் போக்கு காட்டின. காளைகள் முட்டிய
தில் 3 வீரர்கள் லேசான காயமடைந்தனர்.

Tags : Vadamadu Manchuvirattu ,Devakottai ,
× RELATED தேவகோட்டையில் 1500 மதுபாட்டில்கள் பறிமுதல்