திருப்பூர், ஏப்.22: திருப்பூர் தாராபுரம் சாலை பெருந்தொழுவை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் (80). உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார். அவரது உடலை பெருந்தொழுவு பகுதியில் உள்ள பொது மயானத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சடலத்துடன் ஞானப்பிரகாசத்தின் ஆதரவாளர்கள் பெருந்தொழுவு 4 சாலை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.