பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

ஈரோடு,ஏப்.22: ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் இருந்து வெள்ளோடு வழியாக நேற்று காலை அரசு டவுன் பஸ் ஒன்று ஈரோடு பஸ் ஸ்டாண்ட் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் ஈரோடு ரங்கம்பாளையம் அடுத்துள்ள கே.கே.நகர் பஸ் ஸ்டாப்பில் பயணிகளை ஏற்றிக்கொண்டு, அரசு ஐடிஐ பஸ் ஸ்டாப் நோக்கி சென்றது. அப்போது, பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால், படிகட்டில் பயணம் செய்த கே.கே.நகரை சேர்ந்த வள்ளியம்மாள்(50) என்பவர் பஸ்சில் இருந்து தவறி சாலையில் விழுந்தார்.

இதைப்பார்த்த சக பயணிகள் கூச்சல்போட, பஸ்சை டிரைவர் நிறுத்தினார். பஸ் மெதுவாக சென்றதாலும், பின்புறம் எந்த வாகனமும் வராததால் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் வள்ளியம்மாள் உயிர் தப்பினார். இதையடுத்து 108 ஆம்புலன்சு மூலம் வள்ளியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Related Stories: