ஈரோடு,ஏப்.22: ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் இருந்து வெள்ளோடு வழியாக நேற்று காலை அரசு டவுன் பஸ் ஒன்று ஈரோடு பஸ் ஸ்டாண்ட் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் ஈரோடு ரங்கம்பாளையம் அடுத்துள்ள கே.கே.நகர் பஸ் ஸ்டாப்பில் பயணிகளை ஏற்றிக்கொண்டு, அரசு ஐடிஐ பஸ் ஸ்டாப் நோக்கி சென்றது. அப்போது, பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால், படிகட்டில் பயணம் செய்த கே.கே.நகரை சேர்ந்த வள்ளியம்மாள்(50) என்பவர் பஸ்சில் இருந்து தவறி சாலையில் விழுந்தார்.