சாராயம் விற்றவர் கைது

அந்தியூர்,ஏப்.22: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மூலக்கடை பகுதியில் சாராயம் விற்பதாக வெள்ளிதிருப்பூர் தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் ஜி.எஸ் காலனி மந்தை பகுதியைச் சேர்ந்த முருகேசன்(47) என்பவர் சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் 3 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்து, பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: