விருதுநகர்,ஏப்.21: விருதுநகர் அருகே சூலக்கரையை சேர்ந்தவர் கிருஷ்ணன்(86). இவர் தனது வீட்டுவாசலுக்கு வந்த கோழியை விரட்டி உள்ளார். இதை பார்த்த கோழியின் உரிமையாளர் மாரிமுத்து, முதியவரை தாக்கி காயப்படுத்தி உள்ளார். விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள கிருஷ்ணன் புகாரில், சூலக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.