×

மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

சிங்கம்புணரி, ஏப்.21: மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் புதூர் பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, இந்தி மொழி திணிப்பு, மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் தாலுகா செயலாளர் காந்திமதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேதுராமன், மாவட்டக்குழு சாந்தி மற்றும் மாதர் சங்க, விவசாய சங்க, தொழிற்சங்க, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Marxist ,
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...