×

மஞ்சுவிரட்டு நடத்திய 10 பேர் மீது வழக்கு

சிங்கம்புணரி, ஏப்.21: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் ஆர்.பாலக்குறிச்சி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக விஏஓ அப்பாத்துரை உலகம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் அப்பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, ராஜீவ், வெள்ளைச்சாமி, பொன்னுச்சாமி, முத்துக்குமார் உள்ளிட்ட 10 பேர் மீது உலகம்பட்டி எஸ்ஐ மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ