குழந்தைகளுடன் இளம்பெண் திடீர் மாயம்

ஈரோடு,  ஏப். 21: ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி வளையகாரபாளையத்தை சேர்ந்தவர்  லட்சுமணன் (31). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி (28). இவர்களுக்கு 2  மகள்கள் உள்ளனர். லட்சுமணன் கடந்த 18ம் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்று  விட்டு மாலை வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது மனைவியையும், குழந்தைகளையும்  காணவில்லை.

தனலட்சுமியின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.  உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.  இதுகுறித்து லட்சுமணன் கவுந்தப்பாடி போலீசில் நேற்று முன்தினம் புகார்  அளித்தார். இந்த புகாரின்பேரில், மாயமான தனலட்சுமியையும், குழந்தைகளையும்  போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: