ஈரோடு, ஏப். 21: ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி வளையகாரபாளையத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (31). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி (28). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். லட்சுமணன் கடந்த 18ம் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது மனைவியையும், குழந்தைகளையும் காணவில்லை.