ஈரோடு, ஏப். 21: ஈரோடு, கொல்லம்பாளையம், காந்திஜி வீதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (59). விவசாயி. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக பாதையில் ஆபரேசன் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அதே இடத்தில் வலி ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்றார். எனினும் வலி குறைந்தபாடியில்லை. இதனால் விரக்தியடைந்த முத்துகிருஷ்ணன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தென்னை மரத்துக்கு பயன்படுத்தப்படும் சல்பர் மாத்திரையை தின்று சிறிது நேரத்தில் மயங்கினா விழுந்தார்.