விவசாயி தற்கொலை

ஈரோடு, ஏப். 21: ஈரோடு,  கொல்லம்பாளையம், காந்திஜி வீதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (59). விவசாயி.  இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக பாதையில் ஆபரேசன் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அதே இடத்தில் வலி ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை  பெற்றார். எனினும் வலி குறைந்தபாடியில்லை. இதனால் விரக்தியடைந்த  முத்துகிருஷ்ணன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தென்னை மரத்துக்கு பயன்படுத்தப்படும் சல்பர் மாத்திரையை தின்று சிறிது நேரத்தில் மயங்கினா விழுந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்முத்துகிருஷ்ணனை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் நேற்று முன்தினம்  முத்துகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Stories: