குடியாத்தம், மார்ச் 31: குடியாத்தத்தில் கூட்டுறவு வங்கி பேரவைக்கூட்டம் நடந்தது. குடியாத்தம் நகர கூட்டுறவு வங்கியின் 110வது பேரவை கூட்டம் பிச்சனூர்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான அருட்பெருஞ்ஜோதி தலைமை தாங்கினார். வங்கி பொது மேலாளர் அருள் வரவேற்றார்.