பேரணாம்பட்டு, மார்ச் 31: பேரணாம்பட்டு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது.
வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, பேரணாம்பட்டு வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது. இம்முகாமில் 1 வயது முதல் 18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் தேசிய அடையாள அட்டை, மதிப்பீட்டின் அடிப்படையில் உதவி உபகரணங்கள், இலவச அறுவை சிகிச்சை, கல்வி உதவித்தொகை, இலவச பேருந்து தேசிய அடையாள அட்டை போன்றவற்றிற்கு பரிந்துரைக்கப்பட்டது.