ஆரணி, மார்ச் 26: ஆரணி அருகே விஏஓவை பணி செய்ய விடாமல் தடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். ஆரணி அடுத்த புங்கம்பாடி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக சரவணன், வேலை செய்து வருகிறார். கடந்த 16ம் தேதி அரியாலை கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் நிலத்தை சர்வே செய்வதற்காக பணம் செலுத்தியுள்ளார். இதனால், விஏஓ சரவணன், சர்வேயர் ராஜ்குமார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் நிலத்தை சர்வே செய்வதற்காக சென்றனர். மேலும், அங்கு வந்த பக்கத்து நிலத்தை சேர்ந்த கஸ்தூரி, இவருடைய மகன்கள் முத்து, முத்துசாமி நிலத்தை அளவீடு செய்ய விடாமல்,