திருவண்ணாமலை, மார்ச் 24: விளையாட்டு விடுதியில் மாணவ, மாணவிகள் சேர்வதற்கு மாவட்ட அளவிலான வீரர்கள் தேர்வு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் விளையாட்டு விடுதிகளில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டு துறையில் சாதனை படைக்க பயிற்சி, தங்கும் இடம், உணவு வசதியுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மாணவர்கள், மாணவிகளுக்கு தனி தனியாக செயல்பட்டு வருகிறது. இத்தகைய விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 22ம் தேதி வரை விண்ணப்பித்து வந்தனர்.