வேலூர், பிப்.17:வேலூர் சைதாப்பேட்டையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ேவலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சைதாப்பேட்டை பிடிசி ரோட்டில் சுமார் 5 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களுக்கு மாநகராட்சி சார்பில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பைப்லைன் உடைந்ததால் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக உள்ளூர் குடிநீர் ஆதாரம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இப்பகுதியில் சுமார் ஒரு மாதமாக சீரான குடிநீர் வழங்கவில்லையாம். இதுகுறித்து மாநகராட்சியிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.