தாய் இறந்த சோகம் மகள் தற்கொலை

திருச்சி, ஜன. 29: ரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை. கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரண்யா (21). கடந்த 4 ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்தாண்டு சரண்யாவின் தாய் எலிபேஸ்ட் தின்று தற்கொலை செய்து கொண்டார். இதனால் சரண்யா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். கடந்த 25ம் தேதி அவரும் எலி பேஸ்ட் தின்று தற்கொலைக்கு முயன்றார். சரண்யாவை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரங்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: