வேலூர் , ஜன.29: வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் 91 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டில் வருகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களும் கண்டறியப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சியில் 437 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. 2 நகராட்சிகளில் 141 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. பேரூராட்சிகளில் 68 வாக்குச்சவாடி மையங்கள் என்று மொத்தம் 646 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது.