பென்னாத்தூர் பேரூராட்சியில் வேட்புமனு தாக்கல் பணிகளை உள்ளூர் பார்வையாளர் ஆய்வு

அணைக்கட்டு, ஜன.29: பென்னாத்தூர் பேரூராட்சியில் வேட்பு தாக்கல் பணிகளை உள்ளூர் பார்வையாளர் ஆய்வு செய்தார். பென்னாத்தூர் போரூராட்சியில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட முதல் நாளான நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், நேற்று காலை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய போதுமான ஏற்பாடு செய்யபட்டுள்ளதா என பென்னாத்தூர் பேரூராட்சிக்கு நியமிக்கப்பட்டுள்ள உள்ளூர் பார்வையாளர் புருஷோத்குமார் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டியவர்கள் கடைபிடிக்க வேண்டிய படிவங்களை வெளியிட்டு பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் அர்ச்சுனனுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது துணை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஜவர்கர்லால், தியாகராஜன், பேரூராட்சி பணியாளர் திருமால் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: