கோட்டூர் வட்டார வள மையத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி

மன்னார்குடி, ஜன.29: கோட்டூர் வட்டார வள மையத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இம்முகாமை, வட்டாரக் கல்வி அலுவலர் செல்வம் பார்வையிட்டு பேசுகையில், உங்களிடம் பாடம் கற்க வரும் மாணவர்கள் அனைவரும் தெய்வத்திற்கு நிகரானவர்கள். குழந்தையும் தெய்வமும் ஒன்று. இதனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு பாடம் நடத்தி அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்றார்.

முகாமில், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கபாபு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர் பொன்முடி, ஆசிரியர் பயிற்றுநர்கள் கல்பனா, அய்யப்பன் உள்பட பலர் பலர் கலந்து கொண்டு தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கினர். முன்னதாக வட்டார வள மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுநர் பபியோலா நன்றி கூறினார்.

Related Stories: