ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கல்

கும்பகோணம்,ஜன.29: கும்பகோணம் ரோட்டரி சங்கம் சார்பாக 73வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு கும்பகோணம் அருகே திருநல்லூர் கிராமத்தில் ரோட்டரி சங்கத்தால் தத்தெடுக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு எழுதுகோல், நோட்டு புத்தகங்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் முகாம் நடைபெற்றது. திருநல்லூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் கும்பகோணம் ரோட்டரி சங்க தலைவர் கோபிதாஸ் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் மாவட்ட சேர்மன் வின்சன்ட் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கிராமம் தத்தெடுத்தல் சேர்மேன் பாஸ்கரன் திட்ட விளக்க உரை வழங்கினார். ஊராட்சிமன்ற தலைவர் மரகதம் சுவாமிநாதன் ஏற்புரை வழங்கினார். முகாமில் திட்ட உதவி செய்த பாஸ்கரன், சுவாமிநாதன், நரேஷ் குமார், அசாருதீன் உதுமான் அலி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இறுதியாக கும்பகோணம் ரோட்டரி சங்க பொருளாளர் செந்தில்குமார் நன்றியுரை வழங்கினார்.

Related Stories: