புதுக்கோட்டை, ஜன.29: புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றி வரும் 204 காவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் காவலர்கள் 135 பேரை இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு காவல் நிலையம் விட்டு மற்றொரு காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.