புதுக்கோட்டை மாவட்டத்தில் 204 காவலர்கள் இடமாற்றம்

புதுக்கோட்டை, ஜன.29: புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றி வரும் 204 காவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் காவலர்கள் 135 பேரை இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு காவல் நிலையம் விட்டு மற்றொரு காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அறந்தாங்கி, ஆலங்குடி, புதுக்கோட்டை மற்றும் பொன்னமராவதி ஆகிய பகுதிகளில் பணியாற்றிய 29 போக்குவரத்து காவலர்களை சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 40 பேர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் இருந்து அறந்தாங்கி, ஆலங்குடி, புதுக்கோட்டை மற்றும் பொன்னமராவதி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட போக்குவரத்துக் காவலர்களாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: