சுதந்திர போராட்ட வீரர் காலமானார்

குளத்தூர், ஜன. 29: ஆறுமுகநேரியை சேர்ந்த குழந்தை ஆழ்வார் மகன் பெரியசாமி நாடார்(101). சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜருக்கு நெருங்கிய நண்பரான இவர், காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார். இவரது மனைவி சொர்ணம்மாள். 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை தினசரி பத்திரிகைகளை தூத்துக்குடி முக்கிய வீதிகளில் தலைப்பு செய்திகளோடு விற்றதால் இவருக்கு தலைப்பு செய்தி பெரியசாமி என்ற பெயரும் உண்டு.  

சுதந்திர போராட்ட வீரருக்கான பென்ஷன் உதவித்தொகையை நிராகரித்தார். இவரது மனைவி காலமானதையடுத்து வயது முதிர்வு காரணமாக குளத்தூரில் உள்ள மகள் செந்தூர்கனி வீட்டில் வசித்து வந்தார். தற்போது 101 வயது கடந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் உயிரிழந்தார். இவரது உடல் அடக்கம், குளத்தூரில் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Related Stories: