குளத்தூர், ஜன. 29: ஆறுமுகநேரியை சேர்ந்த குழந்தை ஆழ்வார் மகன் பெரியசாமி நாடார்(101). சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜருக்கு நெருங்கிய நண்பரான இவர், காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார். இவரது மனைவி சொர்ணம்மாள். 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை தினசரி பத்திரிகைகளை தூத்துக்குடி முக்கிய வீதிகளில் தலைப்பு செய்திகளோடு விற்றதால் இவருக்கு தலைப்பு செய்தி பெரியசாமி என்ற பெயரும் உண்டு.