வாலிபரை கல்லால் தாக்கிய ரவுடி கைது

தூத்துக்குடி, ஜன. 29: தூத்துக்குடி  தபால் தந்தி காலனியை சேர்ந்தவர் மாடசாமி மகன் இசக்கிசிவா(26).  இவர், தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை அருகே நின்றிருந்த போது அங்கு வந்த சின்னமணி நகரை சேர்ந்த ஜெயராமன் மகன்  சுதந்திரராஜா(32) என்பவர் இசக்கிசிவாவிடம்  தகராறு செய்து கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிந்து சுதந்திரராஜாவை கைது செய்தனர். சுதந்திரராஜா மீது தூத்துக்குடி சிப்காட், மத்தியபாகம்,  சென்னை கோயம்பேடு ஆகிய காவல்நிலையங்களில்  கொலைகள், கொலை முயற்சி,  திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது   குறிப்பிடத்தக்கது.

Related Stories: