தூத்துக்குடி, ஜன. 29: தூத்துக்குடி தபால் தந்தி காலனியை சேர்ந்தவர் மாடசாமி மகன் இசக்கிசிவா(26). இவர், தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை அருகே நின்றிருந்த போது அங்கு வந்த சின்னமணி நகரை சேர்ந்த ஜெயராமன் மகன் சுதந்திரராஜா(32) என்பவர் இசக்கிசிவாவிடம் தகராறு செய்து கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.