பெண்கள் குளியலறையில் கேமரா வைத்தவர் கைது

ஆலந்தூர், ஜன.29: வளசரவாக்கத்தை சேர்ந்தவர் பாரதி (49). மதுரவாயல் பகுதி திமுக மகளிரணி அமைப்பாளரான இவர், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நேற்று கட்சி நேர்காணலுக்காக சென்றுவிட்டு, கிண்டியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றார். முன்னதாக அங்குள்ள பாத்ரூம் சென்றபோது, அங்கிருந்த அட்டை பெட்டியில் செல்போன் ஒன்று மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.

அதை எடுத்து பார்த்தபோது, அதில் வீடியோ பதிவாகிக் கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது, முறையாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், அந்த  செல்போனை கிண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்து, புகார் கொடுத்தார்.  விசாரணையில் செல்போனை மறைத்து வைத்திருந்தது ஓட்டலில் எலக்ட்ரீசியனாக வேலை செய்யும்  கண்ணன் (28) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்தனர். 

Related Stories: