நெல்லை மாநகராட்சியில் 3 உதவி செயற்பொறியாளர்கள் திடீர் மாற்றம்

நெல்லை, ஜன. 29: நெல்லை மாநகராட்சியில் 3 உதவி செயற்பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்து கமிஷனர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றி வருபவர்களை மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் நெல்லை மாநகராட்சியில் பணியாற்றி வரும் 3 உதவி செயற்பொறியாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

அதன்படி, தச்சநல்லூர் மண்டல அலுவலக உதவி செயற்பொறியாளர் சாந்தி பாளையங்கோட்டை மண்டல உதவி  செயற்பொறியாளராகவும், பாளை. மண்டல உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) ராமசாமி மேலப்பாளையம் மண்டல உதவி செயற்பொறியாளராகவும் (பொறுப்பு), மேலப்பாளையம் மண்டல உதவி செயற்பொறியாளர்  (பொறுப்பு) லெனின் தச்சநல்லூர் மண்டல உதவி செயற்பொறியாளராகவும் (பொறுப்பு) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: