சேலம், ஜன.29: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 31 பேரூராட்சிகளுக்கு தேர்தலல் நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக வேட்பு மனு தாக்கல் செய்ய பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில் உள்ள 1, 2, 3, 18, 19, 20, 21 ஆகிய வார்டுகளுக்கு உதவி ஆணையர் சிபி சக்கரவர்த்தியும், 22, 23, 24, 25, 26, 27, 28 ஆகிய வார்டுகளுக்கு உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.