சூரமங்கலம் 1வது வார்டில் ஒருவர் மனு செய்தார் மனுதாக்கல் தொடங்கியது

சேலம், ஜன.29: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 31 பேரூராட்சிகளுக்கு தேர்தலல் நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக வேட்பு மனு தாக்கல் செய்ய பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில் உள்ள 1, 2, 3, 18, 19, 20, 21 ஆகிய வார்டுகளுக்கு உதவி ஆணையர் சிபி சக்கரவர்த்தியும், 22, 23, 24, 25, 26, 27, 28 ஆகிய வார்டுகளுக்கு உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, முதல் நாளான நேற்று சுயேட்சை வேட்பாளர்கள் அதிகளவில் வேட்புமனுவை வாங்கி சென்றனர். சூரமங்கலம் 1வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட பாரத மக்கள் கட்சியின் மாநில தலைவர் கதிர்வேல் (55) என்பவர் தேர்தல் நடத்து அலுவலரும், உதவி ஆணையருமான சிபி சக்கரவத்தியிடம் வேட்பு மனுவை முதல் நபராக தாக்கல் செய்தார்.

Related Stories: