திருச்செங்கோடு, ஜன.29: திருச்செங்கோடு அடுத்த வையப்பமலை கவிதாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 73வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. நிர்வாக மேலாண்மை துறை உதவி பேராசிரியர் முத்துகுமார் வரவேற்றார். தாளாளர் செந்தில்குமார் தேசிய கொடியேற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். கல்லூரி முதல்வர் விஜயகுமார் வாழ்த்திப் பேசினார்.