ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு

கிருஷ்ணகிரி, ஜன.29: கிருஷ்ணகிரியில் வருகிற பிப்ரவரி 4ம் தேதி நடைபெற இருந்த ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வருகிற பிப்ரவரி 4ம் தேதி காலை 10.30 மணிக்கு, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற இருந்தது.

தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளதால், ஓய்வூதியதாரர்களின் வயது மற்றும் உடல்நலத்தை கருத்தில் கொண்டு, ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம், தேதி ஏதும் குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: